×

புன்னம் சத்திரம் அருகே டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

வேலாயுதம் பாளையம், செப்.5:புன்னம் சத்திரம் அருகே டிரைவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மேலப்பாளையம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன்( 53) .இவர் ஈரோடு சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் சோப்புஆயில் தயார் செய்யும் கம்பெனியில் கடந்த 10 வருடமாக வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் முருகன் நேற்று முன்தினம் வாகனத்தில் சோப்பு ஆயில் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் பகுதிக்கு சென்று அங்கு விற்பனை செய்தார்.

பின்னர் நேற்று ஈரோடு செல்வதற்காக அதிகாலை சுமார் 2.20 மணி அளவில் கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள புன்னம் சத்திரம் பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது புன்னம் சத்திரம் அருகே உள்ள பழைய டாஸ்மாக் கடை அருகே வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினார் .அப்போது அங்கு பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் முருகனை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.பின்னர் அவரது குரல் வலையில் கத்தியை வைத்து பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து தருமாறு மிரட்டி உள்ளனர். அப்போது அவரது பாக்கெட்டில் ரூ. 500 மட்டும் இருந்துள்ளது. அதை எடுத்து கொடுத்துள்ளார். முருகனின் பாக்கெட்டை பரிசோதனை செய்த மர்ம நபர்கள் வேறு பணம் இல்லாததால் முருகனை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி பைக்கில் தப்பி சென்று விட்டனர் . இது குறித்து முருகன் சோப்பு ஆயில் நிறுவன உரிமையாளருக்கும் மேலாளருக்கும் தகவல் தெரிவித்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்ஐ நந்தகோபால் வழக்கு பதிவு செய்து முருகனிடம்‘பணம் பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றார்.

The post புன்னம் சத்திரம் அருகே டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Punnam Chatram ,Velayutham Palayam ,
× RELATED புன்னம்சத்திரம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்